search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பள்ளி விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    பள்ளி விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
    • கோடை விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவைப் பகுதியில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது, தமிழக அரசு 7-ம் தேதி பள்ளிகளை தொடங்கும் என்று அறிவித்த காரணத்தால், புதுவை அரசும் எந்த ஒரு மருத்துவக் குழுவின் ஆலோசனைகளை கேட்காமல் 7-ந் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவித்த அறிவிப்பு, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமத்தை மற்றும் உடல் பாதிப்புகளை இந்த அதிகபட்ச வெயிலின் தாக்கத்தால் ஏற்படுத்தும்.

    எனவே புதுவை அரசு மாணவர்க ளின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு சேர வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை கடந்த காலங்களைப் போல் இல்லாமல் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×