என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிருமாம்பாக்கம் ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
    X

    கிருமாம்பாக்கம் ஏரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

    கிருமாம்பாக்கம் ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    • உலக பூமி தினத்தையொட்டி ஏற்பாடு.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உலக புவி தினத்தை முன்னிட்டு கிருமாம்பாக்கம் ஏரிக்கரையை சுற்றி பாரத் பசுமை அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி பொது சுகாதார பல் மருத்துவ குழுவினர், இணைந்து கிருமாம்பாக்கம் ஏரியில் மரம் நடும் நிகழ்ச்சியை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் இந்திராகாந்தி பல் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் அருணா ஷர்மா, மற்றும் முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக புதுவை சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக பொது சுகாதார துறை சமுதாய பல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் செந்தில், பாரத் பசுமை அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×