search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இளைஞரணி அமைப்பாளராக சம்பத் எம்.எல்.ஏ. நியமனம்
    X

    கோப்பு படம்.

    இளைஞரணி அமைப்பாளராக சம்பத் எம்.எல்.ஏ. நியமனம்

    • உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
    • மாநில இளைஞர் அணிக்கு தலைமை கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    அடுத்த கட்டமாக கட்சியின் 23 அணிகளில் முதல் அணியாக உள்ள மாநில இளைஞர் அணிக்கு தலைமை கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.

    தி.மு.க. அமைப்பாளர் சிவா பரிந்துரைப்படி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒப்புதலுடன், புதுவை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    புதுவை மாநில தி.மு.க. இளைஞர் அணிக்கு புதிய அமைப்பாளராக முலியார்பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணை அமைப்பாளர்க ளாக மணவெளி தொகுதி தமிழ்பிரியன், முத்தியால் பேட்டை உத்தமன், உருளையன் பேட்டை வக்கீல் ரெமி எட்வின்குமார், மண்ணாடிப்பட்டு வக்கீல் அகிலன், உருளை யன்பேட்டை தொகுதி தாமரைக்கண்ணன், நெல்லித்தோப்பு கிருபா சங்கர், நெல்லித்தோப்பு சந்துரு, வில்லியனூர் பஜூலுதீன், உப்பளம் நித்திஷ் நிமோத்தி, திருபுவனை முகிலன் அல்லிமுத்து ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×