என் மலர்
புதுச்சேரி

பேனர் கம்பத்துக்கு வழிவிட்டு சாலை அமைக்கப்பட்டுள்ள காட்சி.
பேனர் கம்பத்துக்கு வழிவிட்டு சாலை அமைப்பு
- சாலை அமைக்கும் பணியின்போது அந்த பேனர் வைக்கப்பட்ட கம்பத்தை சுற்றிலும் வழிவிட்டு சாலை அமைத்துள்ளனர்.
- எடையார்பாளையத்தில் வாய்க்கால் அமைக்கும் ேபாது மின்கம்பத்தையும் சேர்த்து கான்கிரீட் அமைத்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையின் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதுபோல் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
ரெட்டியார்பாளையம் பகுதியில் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரை சாலை ஓரத்தில் மின்கம்பத்தோடும், சாலையின் ஓரத்தில் கம்பு நட்டு பேனர் வைத்துள்ளனர்.
சாலை அமைக்கும் பணியின்போது அந்த பேனர் வைக்கப்பட்ட கம்பத்தை சுற்றிலும் வழிவிட்டு சாலை அமைத்துள்ளனர். நாளை பேனர் அகற்றப்பட்ட பின் அந்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்படும்.
இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது தவறி விழுந்து காயம் ஏற்படவும் வாய்ப் புள்ளது. இதே போல எடையார்பாளையத்தில் வாய்க்கால் அமைக்கும் ேபாது மின்கம்பத்தையும் சேர்த்து கான்கிரீட் அமைத்து வாய்க்கால் அமைக்கப் பட்டது. இத்தகைய சம்பவங்கள் கேலிக்குரிய தாகி வருகிறது.






