என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சாலை சீரமைப்பு பணி
- அங்காளன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
- இளநிலைப் பொறியாளர் தமிழரசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை செல்லிப்பட்டு சாலை, விநாயகம்பட்டு, சோரப்பட்டு இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்து டனே அவ்வழியாக பொதுமக்கள் வாகனத்தில் சென்று வந்தனர் இந்நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறையின் மூலம் ரூ. ஒரு கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு செல்லிப்பட்டு, விநாயகபட்டு , சோரப்பட்டு இணைப்பு சாலையை மறு சீர் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அங்காளன் எம்.எல்.ஏ.கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்