என் மலர்
புதுச்சேரி

சாலை-வாய்க்கால் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்த காட்சி.
ரூ.2 கோடியில் சாலை-வாய்க்கால் அமைக்கும் பணி
- எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
- ம.தி.மு.க மாநில செயலாளர் கபிரியேல், தொகுதி அவைத் தலைவர் ஜலால் ஹனீப், மற்றும் ஊர் முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் ஜி.என்.பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதி களில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு மூலம் ரூ. 2 கோடி மதிப்பில் சாலைகள் மற்றும் எல்' வடிவ வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி அரும்பார்த்த விநாயகர் கோவில் அருகில் நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், ம.தி.மு.க மாநில செயலாளர் கபிரியேல், தொகுதி அவைத் தலைவர் ஜலால் ஹனீப், மற்றும் ஊர் முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சாலை அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.






