என் மலர்
புதுச்சேரி

ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் காட்சி.
காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு அரிசி
- காமராஜர் பிறந்தநாளையொட்டி ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் இலவச அரிசி வழங்கும் விழா நடந்தது.
- காங்கிரஸ் வக்கீல்கள் அணி தலைவர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
காமராஜர் பிறந்தநாளையொட்டி ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் இலவச அரிசி வழங்கும் விழா நடந்தது. காங்கிரஸ் வக்கீல்கள் அணி தலைவர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மூத்த துணைத்தலைவர் தேவதாஸ் ஆகியோர் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வேல்முருகன், வட்டார தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன், சிறப்பு அழைப்பாளர் பிரதீஷ், தியாகராஜன், ராஜ்குமார், சண்முகம், பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story