என் மலர்
புதுச்சேரி

பொதுப்பணித்துறை அதிகாரிகளை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து பேசிய காட்சி.
பாதாள சாக்கடை பிரச்சினைகளை தீர்க்க கோரிக்கை
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் 3-வது குறுக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை பகுதியில் பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வழிகிறது என அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., கென்னடியிடம் புகார் தெரிவித்தனர்.
- தொகுதி முழுவதும் பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் 3-வது குறுக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை பகுதியில் பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வழிகிறது என அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., கென்னடியிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஊர் பிரமுகர்களுடன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர் ஆகியோரை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்து பேசினார். தொகுதி முழுவதும் பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது தொகுதி அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி தலைவர் ஆரோக்கிய ராஜ், இருதயராஜ், மற்றும் வம்பா கீரப்பாளையம் பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story