search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.39 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.39 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • முத்தியால்பேட்டை தொகுதி முத்தைய முதலியார் வீதியில் குடிநீர் குழாய்கள் மிகவும் மோசமாக இருந்து வந்தது.
    • ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி முத்தைய முதலியார் வீதியில் குடிநீர் குழாய்கள் மிகவும் மோசமாக இருந்து வந்தது.

    இதனை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் வைத்தகோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கையின் பேரில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான தொடக்க விழாவில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார உட்கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×