என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

    • பாஸ்கர் எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதா வலியுறுத்தல்
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சாலை வழியே செல்லும் போது மிகவும் சிரமப்படுவதாக எடுத்து கூறினர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன் நகர் பொது மக்களுடன் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.பாஸ்கரை சந்தித்து பேசினார். அப்போது செங்கழுநீரம்மன் நகரில் மழையினால் சாலை கள் சேத மடைந்துள்ளது.

    இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சாலை வழியே செல்லும் போது மிகவும் சிரமப்படுவதாக எடுத்து கூறினர்.

    இதையடுத்துபாஸ்கர் எம்.எல்.ஏ. உடனடியாக இளநிலை பொறியாளரை அழைத்து துரிதமாக அந்த சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொய்வில்லாமல் சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும் மழைக்காலம் முடிந்தவுடன் அந்த சாலைகளை நிரந்தரமாக சரி செய்து கொடுப்பதாகவும் பாஸ்கர் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது பா.ஜனதா தொகுதி பொதுச் செயலாளர்கள் பிச்சமுத்து மற்றும் முருகவேல் ஆகி யோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×