search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு
    X

    மேம்பாலத்தில் விரிசல் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கிய காட்சி.

    மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு

    • இன்று முதல் போக்குவரத்து தொடங்கியது
    • அவ்வழியே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை-நாகப்பட்டி னம் 4 வழி சாலை பணிகள் எம்.என் குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்த 4 வழி சாலையில் 5 பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி திருவண்டார் கோவில் மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல அச்சமடைந்தனர். மேலும் அவ்வழியே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    இதனால் திருபுவனை, கண்ட மங்கலம் பகுதியில் ஒரு வழி சாலை அமைக்கப் பட்டு வாகனங்கள் சென்று வந்தது. மேலும் கண்ட மங்கலம் மேம்பாலத்தின் தெற்கு புறமாக செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருவாண்டார்கோயில், திருபுவனை வழியாக ஒரு வழி பாதையில் கடந்த 8 நாட்களாக சென்று வந்த ன. இதனால் அப்பகுதிகளில் காலை, மாலையும் கடுமை யான போக்குவரத்து நெரிச லும் வாகன விபத்துகளும் நடந்தது.

    தற்போது 8 நாட்க ளுக்குப் பிறகு மேம்பாலத்தில் விரிசல் சீரமைக்கப்பட்டது. இன்று காலை அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் அனைத்து வாக னங்களும் செல்கின்றன.

    Next Story
    ×