search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆயி குளத்தை புனரமைத்து நினைவு மண்டபம்
    X

    கோப்பு படம்.

    ஆயி குளத்தை புனரமைத்து நினைவு மண்டபம்

    • புதுவை அருகே முத்திரையர்பாளையத்தில் உள்ள ஆயி குளத்தை புனரமைத்து புதுவையின் அடையாளத்தை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
    • குளத்தை புனரமைத்து, சுற்றிலும் நடைபாதை அமைத்து விளக்குகள் அமைத்து அழகுபடுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    ஆறுமுகம்(என்.ஆர்.காங்):- முத்திரைய ர்பாளையத்தில் உள்ள ஆயி குளத்தை புனரமைத்து புதுவையின் அடையாளத்தை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? முதல்-அமைச்சர் ரங்கசாமி:- அம்ருத் 2 திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ஏ.கே.டி.ஆறுமுகம்:- முத்திரை யர்பாளையம் பகுதி மக்கள் ஆயி குளத்தை புனரமைக்க வேண்டும் என விரும்புகின்றனர். குளத்தை புனரமைத்து, சுற்றிலும் நடை பாதை அமைத்து விளக்குகள் அமைத்து அழகுபடுத்த வேண்டும். குளத்தின் நடுவே ஆயிக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி:- நீங்களே வரைபடம் தயாரித்து கொடுங்கள். ஆயி குளத்தை மேம்படுத்தும் பணியை செய்யலாம். தற்போது அங்கு தண்ணீர் அதிகமாக இருப்பதில்லை. சுற்றுலாத்துறையின் மூலம் பணிகளை செய்யலாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×