search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரங்கசாமிக்கு நீட் தேர்வு, மாநில அந்தஸ்து பற்றி கவலை இல்லை
    X

    மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    ரங்கசாமிக்கு நீட் தேர்வு, மாநில அந்தஸ்து பற்றி கவலை இல்லை

    • தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் சிவா பேட்டி
    • அவருக்கு இதைப்பற்றி யெல்லாம் கவலையும் இல்லை, ரங்கசாமிக்கு 5 ஆண்டு முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    புதுச்சேரி:

    நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசு, தமிழ்நாடு கவர்னரை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

    அது போல் நீட் தேர்வு விவகாரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது நிலைப்பாடை வெளிப்படை யாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படும் புதுவை கவர்னர் தமிழிசையை கண்டித்தும் புதுவை மாநில தி.மு.க. சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    புதுவை மாநில தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்திய போராட்டத்துக்கு தி.மு.க மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமை வகித்தார்.

    உண்ணாவிரதப் போராட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், மருத்துவர் அணி ஆனந்த ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே.கல்யாணி குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், லோகையன், ஜே.வி.எஸ்.ஆறுமுகம், காந்தி, அருள்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோசுந்தரம், செல்வநாதன், தர்மராஜன், சக்திவேல், தங்கவேலு, கோபால், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்பரிதி, பழநி, பிரபாகரன், செந்தில்குமார், மாறன், கோபால கிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ், மற்றும் தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொய் பிரசாரம்

    நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை - எளிய மக்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது. நாங்கள் குழப்புவது போல ஆளும் கட்சியினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    2024 மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் . அப்போது நீட் தானாகவே ஒழிந்து விடும். புதுவை, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர் தடுக்கிறார்.

    இந்த நிலையில் நீட் எதிர்ப்பு என்ற போராட்டத்தை தொடர்ந்து நாங்கள் முன்னெடுப்போம். மருத்துவ படிப்பில் 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட, தீர்மானத்தை ஒப்புதல் வாங்கியிருக்கலாம்,

    ஆனால் புதிதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பி ஒப்புதல் பெறுகிறேன் என மக்களை ஏமாற்றி வருகி ன்றனர். மாநில முதல்-அமைச்சருக்கு நீட் தேர்வு பற்றியும், மாநில அந்தஸ்து பற்றி எந்த பார்வையும் இல்லை. அவருக்கு இதைப்பற்றி யெல்லாம் கவலையும் இல்லை, ரங்கசாமிக்கு 5 ஆண்டு முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    நீட் தேர்வில் தி.மு.க. அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏழை மாணவர்களுக்கான உரிமைக்காக போராடி வருகிறோம். இது அரசியலுக்கானது அல்ல, மாணவர்களுக்கான அத்தியாவசியமான போராட்டம். நீட் தேர்வு களையப்படும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு சிவா கூறினார்.

    Next Story
    ×