search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காந்தி- காமராஜர் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவிப்பு
    X

    காமராஜர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சி. 

    காந்தி- காமராஜர் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவிப்பு

    • காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.
    • புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், திராவிடர் கழகம் சிவவீரமணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாளையொட்டி புதுவை கடற்கரை சாலை யில் உள்ள காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.

    சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், நேரு, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு அதிகாரி கள், போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சர்வமத பிரார்த்தனை நடந்தது. தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்தி சிலைக்கு தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன் ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    புதுவை அரசு சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், நேரு, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு அதிகாரி கள், போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், திராவிடர் கழகம் சிவவீரமணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    Next Story
    ×