search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி மாலை
    X

    மணவெளி தொகுதி காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடிய போது எடுத்தபடம்.

    ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி மாலை

    • புதுவை அரசின் சார்பில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
    • கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சார்பில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியும் ஏற்றனர்.

    காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமை யில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீலகங்காதரன், கார்த்தி கேயன், நிர்வாகிகள் இளையராஜா, தனுசு, ரகுமான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி அலுவ லகத்தில் நடந்த விழாவில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×