என் மலர்
புதுச்சேரி

அப்துல் கலாம் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
அப்துல்கலாம் சிலைக்கு ரங்கசாமி மாலை
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், அரசு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கு வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி, கே.எஸ்.பி ரமேஷ் எம்.எல்.ஏ.,ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி:
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், அரசு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி முனைவர். அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கு வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி, கே.எஸ்.பி ரமேஷ் எம்.எல்.ஏ., அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் டாக்டர் முத்தம்மா, துறை இயக்குநர் பிரியதர்ஷினி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் செல்வராஜ், அப்துல் கலாம் - வாழ்க்கை மற்றும் சாதனைகள் என்னும் தலைப்பிலும் திசையன்விளை கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குனர் அஷ்வினிகுமார் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - கணக்கிடுவதற்கான சக்தி என்னும் தலைப்பிலும் விரிவுரையாற்றினர்.
தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனம் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






