search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டிரைவருக்கு சாராய பாட்டில் குத்து
    X

    கோப்புபடம்

    டிரைவருக்கு சாராய பாட்டில் குத்து

    • சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை பாட்டில் குத்து
    • மங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது38). டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை பாட்டிலால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே மங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது38). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மணிமொழி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஞானவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. தினமும் அவர் வேலை முடிந்ததும் மங்கலம் சாராயக்கடையில் சாராயம் குடிப்பது வழக்கம் அதுபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் டிரைவர் வேலைக்கு செல்லாமல் ஞானவேல் மங்கலம் சாராயக்கடைக்கு சாராயம் குடிக்க சென்றார்.

    அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்த போது ஞானவேலுக்கு தெரிந்த நபரான குரு(38) என்பவரும் சாராயம் குடித்தார். அப்போது குடி போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த குரு தகாத வார்த்தைகளால் திட்டி சாராய பாட்டிலால் ஞானவேல் தலையில் தாக்கினார். இதனால் ரத்தம் கொட்டிய நிலையில் வலி தாங்காமல் ஞானவேல் அலறினார். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே குரு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காய மடைந்த ஞானவேல் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×