என் மலர்
புதுச்சேரி

பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
புதுவை பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- நிர்வாகிகளுடன் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
- மாவட்டம் மகளிர் அணி தலைவி வல்லி, கார்த்தி கேயன், ஆனந்தன், வெங்கடேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
சந்திராயன்-3 நிலவில் தரையிறங்கியதை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் பா.ஜனதா கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
வெற்றி கொண்டா ட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டை தொகுதி அய்யனார் கோவில் அருகில் நிர்வாகி களுடன் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பா.ஜனதா மாநில செய லாளர் லதா உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஊடகப்பிரிவு மாநில அமைப்பாளர் குருசங்கரன், குமரன் நகர் கேந்திர பொறுப்பாளரும் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செ யலாளர் சீனிவாச பெருமாள், லாஸ்பேட்டை தொகுதி பொதுச்செயலாளர் ஆறுமுகம், உழவர்கரை மாவட்டம் மகளிர் அணி தலைவி வல்லி, கார்த்தி கேயன், ஆனந்தன், வெங்கடேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






