search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காமராஜர் பிறந்தநாள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.

    காமராஜர் பிறந்தநாள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    • மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
    • நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே திருவண்டார் கோவில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டா டப்பட்டது.பள்ளி தலைவர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மிஸ்டிகன் ஆண்டோ ரிச்சர்ட் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரமேஷ் வரவேற்றார்.

    விவிழாவையொட்டி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×