search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு பணியில் முன்னுரிமை
    X

    கோப்பு படம்.

    கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு பணியில் முன்னுரிமை

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கோரிக்கை
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காலத்தில் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் டாக்டர்கள்,நர்சுகள்,மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியாற்றினர்.

    அவர்களது சேவையை உலகமே பாராட்டுகின்ற நிலையில், நமது புதுவை மாநில அரசு 2020-ம் ஆண்டு தகுதியான சுகாதார பணியாளர்களை சான்றிதழ்கள் சரி பார்த்து நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தனர்.

    ஆஷா பணியாளர்களுக்கு ரூ.3,000மும் செவிலியர்க ளுக்கு ரூ.15,000 மற்றும் மருத்துவர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கி வந்துள்ளனர். அவர்களை தொடர்ச்சியாக பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக அவர்கள் செய்த அதே வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக விளம்பரப்ப டுத்தி உள்ளது வன்மையாக கண்டிக்க த்தக்கது. கொரோனா காலத்தில் அவர்கள் ஆற்றிய சேவை மிகவும் பாராட்ட த்தக்கது என்று பலமுறை கூறிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்.

    அவர்கள் நியா யமான அறவழிப் போராட்டங்களை உரிமை யை பெற நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டங்களை திசை திருப்பும் விதமாக புதுவை அரசு காவலர்களைக் கொண்டு சுகாதாரப் பணியாளர்களை அப்புறப்படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது.

    காலாப்பட்டு போலீஸ் நிலையம் அருகில் ஒரு அப்பாவிபெண் நீதி கேட்டு தீயிட்டு தற்கொலை செய்தது மிகவும் வருந்தத்தக்கது. அவரது குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு முழுமையான விசாரணை நடத்த புதுவை அரசு உத்தரவிட வேண்டும்.

    புதுவை காவல்துறை உயர் அதிகாரி வாகனம் ஓட்டுவோரின் உரிமங்களை சிறு சிறு குற்றங்களுக்காக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது மிகவும் கண்ட னத்துக்கு ரியது. ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற எவ்வ ளவு கடினமானது என்பது அவருக்குத் தெரியாதா?

    இது தொடர்பாக இதுவரை 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகன ஓட்டு நர்களின் ஓட்டுனர் உரிம ங்களை ரத்து செய்வதனால் அவர்களது குடும்ப வருமானம் முழுவது மாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. என இது தொடர்பாக கவர்னரும், முதல்- அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×