என் மலர்
புதுச்சேரி

ஆரோவில் போலீஸ் நிலையத்தில் போலீசார் பொங்கல் கெண்டாடிய காட்சி.
போலீஸ் நிலையங்களில் பொங்கல் கொண்டாட்டம்
- பொங்கல் விழாவை முன்னிட்டு ஆரோவில், வானூர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையங்களில் போலீசார் தமிழ் கலாச்சாரப்படி பெண் போலீசார் புடவை அணிந்தும் ஆண் போலீசார் வேட்டி அணிந்தும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
- காவலர் முதல் அதிகாரிகள் வரை ஒரே நிறத்தில் புத்தாடை உடுத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர்.
புதுச்சேரி:
பொங்கல் விழாவை முன்னிட்டு ஆரோவில், வானூர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையங்களில் போலீசார் தமிழ் கலாச்சாரப்படி பெண் போலீசார் புடவை அணிந்தும் ஆண் போலீசார் வேட்டி அணிந்தும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
ஆரோவில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் போலீஸ் நிலைய வாசலில் சூரிய பொங்கலிட்டனர். வானூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராபின்சன், கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் முன்னிலையில் அந்தந்த போலீஸ் நிலையங்களில், மண்பானையில் பொங்கலிட்டனர்.
காவலர் முதல் அதிகாரிகள் வரை ஒரே நிறத்தில் புத்தாடை உடுத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர். பொங்கல் சூரியனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.






