search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா மீது பட்டியலின மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்
    X

    ஆலோசனை கூட்டத்தில் மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. பேசிய காட்சி.

    பா.ஜனதா மீது பட்டியலின மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்

    • செல்வகணபதி எம்.பி.பேச்சு
    • அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி ஊர்வலத்தில் பட்டியல் அணி சார்பில் 700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சி பட்டியல் அணியின் சார்பில் அம்பேத்கரின் நினைவு தினத்தை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மோகன்குமார் விளக்க உரையாற்றினார். முன்னதாக புதுவை மாநிலத்தில் உள்ள 23 தொகுதிகளை சேர்ந்த பட்டியல் அணியின் நிர்வா கிகள் அறிமுகப்ப டுத்தப்பட்டனர்.

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி கலந்து கொண்டு அம்பேத்க ரின் நினைவு தினத்தை சிறப்பாக நடத்துவது குறித்து பேசி னார். அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா தலைமை அழைத்த உடனேயே மழை யும் பொருட்படுத்தாமல் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருப்பது கட்சியின் மீது பட்டியல் அணியினர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

    புதுவை பட்டியல் இன மக்களும் பா.ஜனதா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். புதுவையில் பட்டியல் அணி எந்த அளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நடைபெற உள்ள அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி ஊர்வலத்தில் பட்டியல் அணி சார்பில் 700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க வேண்டும்.

    பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கு பிரதமர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் புதுவை மாநிலத்தைச் சார்ந்த பட்டியல் இன மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பா.ஜனதா பட்டியல் அணி நிர்வாகிகள் பிரதமரின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். எதிர்வரும் வரும் காலத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுக்களை நிர்ண யிக்கக்கூடிய அளவிலே பட்டியல் அணி நிர்வாகிக ளின் வளர்ச்சி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டியல் அணி துணைத் தலைவர்கள் எஸ்.கே.சி கஜேந்திரன், சுப்பிரமணியன், ராஜேஸ்வரி பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் காமாட்சி, தட்சிணாமூர்த்தி, ராஜாராம், மாவட்ட தலைவர்கள் வெற்றிவேல், ராஜகுரு அம்பேத்கர், விண்ணரசன் மற்றும் ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×