என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பாசிக் ஊழியர்கள் போராட்டத்துக்கு ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆதரவு
- நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் பல மாதமாக போராடி வருகின்றனர்.
- அவர்களின் போராட்ட த்துக்கு ஏ.ஐ.யூ.டி.யூ.சி. முழு ஆதரவு தெரிவிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தலைவர் சங்கரன், பொதுச்செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் பல மாதமாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்ட த்துக்கு ஏ.ஐ.யூ.டி.யூ.சி. முழு ஆதரவு தெரிவிக்கிறது. தொழிலாளர்கள் பணியின்றி, சம்பளமின்றி வாடுகின்றனர்.
கூட்டுறவுத்துறையில் அமுதசுரபி, பாண்டெக்ஸ் உட்பட பல நிறுவனங்களில் பல மாதமாக சம்பளம் வழங்கவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஸ்பின்கோ நூற்பாலை ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. தொழி லாளர் விரோத போக்கை கைவிட்டு, தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தி அரசு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story






