என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாயிகளுக்கு நெல் சாகுபடி பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு நெல் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.

    விவசாயிகளுக்கு நெல் சாகுபடி பயிற்சி

    • நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடி செய்யும் முறைகள் பற்றிய விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • வேளாண் அறிவியல் நிலைய உளவியல் நிபுணர் முனைவர் ரவி பாரம்பரிய நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி

    புதுவை அரசு வேளாண்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வில்லியனூர் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடி செய்யும் முறைகள் பற்றிய விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வில்லியனூர் வேளாண் அலுவலர் உமாராணி தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய உளவியல் நிபுணர் முனைவர் ரவி பாரம்பரிய நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    பூச்சிகள் நிபுணர் முனைவர் விஜயகுமார் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் மங்களம் உருவையாறு, வில்லியனூர், கீழ் சாத்தமங்கலம், ஒதியம்பட்டு, மற்றும் திருக்காஞ்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×