என் மலர்
புதுச்சேரி

வீடு கட்டுவதற்கான ஆணையை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் வழங்கிய காட்சி.
80 வீடுகள் கட்ட ஆணை
- கல் வீடு கட்டுவதற்கு, 2-ம் மற்றும் 3-ம் தவணை தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
- உழவர்கள் துறை அமைச்சரு மான சாய்.ஜெ.சரவணன் குமார் வழங்கினார்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதிக்குட்பட்ட ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கல் வீடு கட்டுவதற்கு, 2-ம் மற்றும் 3-ம் தவணை தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
பத்துக்கண்ணில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மொத்தம் 80 பயனாளிகளுக்கு மானிய தொகை பெறுவதற்கான ஆணையை ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் உழவர்கள் துறை அமைச்சரு மான சாய்.ஜெ.சரவணன் குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதிதிராவிடர் தொகுதி மக்கள் பொறுப்பாளர் ஜெகதலபிரதாபன் கலந்து கொண்டனர்.
Next Story






