என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பி.எஸ். படம் கிழிப்பு
    X

    உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வம் உருவப்படத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் கிழித்து எறிந்த காட்சி.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பி.எஸ். படம் கிழிப்பு

    • ஒற்றை தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
    • இந்நிலையில் புதுவை உப்பளம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஒன்று கூடினர்.



    புதுச்சேரி:

    ஒற்றை தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

    புதுவை மாநில அ.தி.மு.க.வில் கிழக்கு மாநிலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மேற்கு மாநிலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் உள்ளது.

    இந்நிலையில் புதுவை உப்பளம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஒன்று கூடினர்.

    பின்னர் அவர்கள் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை கிழித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வின் உதவியோடும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணப்படியும், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு விரோதமாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் சதி செயலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் முறியடித்துள்ளனர்.

    அ.தி.மு.க.க்கு எதிராக, தி.மு.க.வின் பி டீமாக செயல்படும் ஓ.பி.எஸ். மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

    இதை தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு புதுவை அ.தி.மு.க. சார்பில் வேண்டுகோளாக வைக்கிறோம். ஓ.பி.எஸ்.,சின் மகன் மு.க.ஸ்டாலின் சிறப்பான முதல்-அமைச்சராக செயல்படுகிறார் என கூறி வருகின்றனர்.

    எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வை அழிக்கும் நோக்கில் அவர்கள் செயல்படுகின்றனர்.

    ஜூலை 11-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பதவியேற்க கிழக்கு மாநில அ.தி.மு.க. முழு ஆதரவை தருகிறது. தமிழகம், புதுவையில் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்க வேண்டும்.

    காரைக்காலில் உள்ள 12 பொதுக்குழு உறுப்பினர்களும், புதுவை கிழக்கு மாநிலத்தின் 23 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் மேற்கு மாநிலத்தில் உள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். செயலாளர் உட்பட கையெழுத்திடாத 10 பேரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×