search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும்
    X

    புதுவை காவல் துறைக்கு வாங்கப்பட்டுள்ள வாகனத்தை அமைச்சர் நமச்சிவாயம் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    புதுவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும்

    • மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    • புதுவை காவல்துறைக்கு புதிய வாகனங்களை வழங்கி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி:

    புதுவை காவல்துறைக்கு புதிய வாகனங்களை வழங்கி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    லாஸ்பேட், ரெட்டியார்பாளையம் காவல்நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் போலீஸ் துறை தலைமை அலுவலகம், கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையம் ஆகியவை கட்டவும், காரைக்காலில் சூப்பிரண்டு அலுவலகம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போலீஸ் தேர்வில் உடல்தகுதித்தேர்வு நடந்துள்ளது. விரைவில் எழுத்துத்தேர்வு நடக்கும். ஊர்க்காவல்படையில் 500 பேரை தேர்வு செய்ய விரைவில் பணிகள் தொடங்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய முதலில் முயற்சி எடுத்தது புதுவை மாநிலம்தான்.

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். பா.ஜனதா ஒருபோதும் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்காது. பயிற்சி முடித்த காவலர்கள் ஜூன் மாதம் போலீஸ் நிலையங் களில் பொறுப்பேற்பார்கள்.

    போலீசாரின் பிறந்தநாள், திருமணநாள் உட்பட அவர்கள் கேட்கும் நாளில் விடுமுறை தர சொல்லியுள்ளோம். வாரவிடுமுறை தருவது அரசு பரிசீலனையில் உள்ளது. போலீஸ் ரோந்து பணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு எடுப்போம்.

    ரோந்து பணிக்கான வாகனங்கள் சீரமைத்து இயக்குவோம். பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. புதுவையில் வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, சீருடை, சைக்கிள், லேப்டாப் அளிக்கப்படும். கவர்னர் ஒப்புதலுடன் விளையாட்டுத் துறை தனி துறையாக அறிவிக்கப்படும். கந்து வட்டி புகார்ககள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×