search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்அம்பேத்கர் பிறந்த நாள் விழா
    X

    ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரோக. அருள்தாஸ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்அம்பேத்கர் பிறந்த நாள் விழா

    • புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்க ங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ள சமூக இயக்கங்களின் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அம்பேத்கர் சிலைக்கு கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் அமாவாசை மாலை அணிவித்து மரியாதை செய்தார். 500 பேருக்கு இனிப்பு மற்றும் உணவும் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்க ங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ள சமூக இயக்கங்களின் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த ஆதிதி ராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரோக.அருள்தாஸ் தலை மையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கலைமணி, கவுரவத் தலைவர் திருமால், பியூச்சர் அரசு ஊழியர் கூட்டமைப்பு தலைவர் செல்வம், அம்பேத்கர் தொண்டர் படை கவுரவத் தலைவர் மணிமாறன், முதன்மைச் செயலர் பாபுராஜ் பொன்றோ, செயல் தலைவர் முத்துகிருஷ்ணன் அமைப்புச்செயலாளர் பொன்னிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தலைமை நிலையச் செயலாளர் இளவயதன், நகரத் தலைவர் செல்வபாண்டியன், நகரத் அமைப்பாளர் ஆதிகேசவன், நகரச் செயலாளர் முனியன், கொள்கை பரப்புச் செயலாளர் பரமசிவம், பொருளாளர் வேல்முருகன், தொண்டர் அணி தலைவர் மாயகிருஷ்ணன், மாணவர் கூட்டமைப்பு தலைவர் மகேந்திரவேலன், அமைப்பாளர் நாகமுத்து, ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் மாநில செயலாளர்கள் நாகராஜன், பாலச்சந்திரன் நிர்வாகச் செயலாளர் போத்திராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    அதை தொடர்ந்து ஏம்பலம் தொகுதி கம்பளிகாரன்குப்பத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் அமாவாசை மாலை அணிவித்து மரியாதை செய்தார். 500 பேருக்கு இனிப்பு மற்றும் உணவும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×