search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

    • காதல் திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சென்னையைச் சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    புதுச்சேரி:

    காதல் திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண். இவர் சென்னையைச் சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    இருவருக்கும் திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகிறது. அருண் தனது மனைவி மோனிஷாவை அழைத்துக் கொண்டு வில்லியனூரை அடுத்த வி.மணவெளி பகுதியில் உள்ள அக்கா மீனாட்சி வீட்டிற்கு வந்துள்ளார்.

    இது அருண் மனைவி மோனிஷாவிற்கு பிடிக்கவில்லை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோனிஷா சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதில் மனம் உடைந்த அருண் அக்கா வீட்டில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருணின் அக்கா மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலூர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×