என் மலர்
புதுச்சேரி

நெட்பால் போட்டியை கராத்தே சுந்தர்ராஜன் தொடங்கி வைத்த காட்சி.
மாணவர்களுக்கான நெட்பால் போட்டி
- கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நெட்பால் போட்டி நடைபெற்றது.
- சங்கத்தின் மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மற்றும் இதயம் பேரியக்கம் தலைவர் புதுவை குமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை அமெச்சூர் நெட்பால் சங்கத்தின் அனுமதி யுடன் டி.என் . சரவணன் விளையாட்டு கழகம் சார்பில் 4-ம் ஆண்டு மாணவ-மாண விகளுக்கான நெட்பால் போட்டி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வரை நடக்கிறது
இதில் ஆண்கள் பிரிவில் 10 அணிகளும் பெண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை புதுவை மாநில கோஜுரியு கராத்தே சங்கத்தின் மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மற்றும் இதயம் பேரியக்கம் தலைவர் புதுவை குமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
மேலும் இவ்விழாவில் புதுவை அமெச்சூர் நெட் பால் சங்கத்தின் தலைவர் நாகரத்தினம், துணை தலைவர் வைத்தியநாதன், பொதுச் செயலாளர் சிவகுமார் மற்றும் மீனாட்சி கணேஷ் பொது சேவை இயக்கம் மற்றும் ஜெயின் சரவணன், விளையாட்டு கழக தலைவர் கணேஷ் மற்றும் அமெச்சூர் நெட்பால் சங்கத்தின் துணைத் தலைவர் பார்த்திபன் , செயற்குழு உறுப்பினர் நாராயணன், சிவபாலன், மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.