என் மலர்
புதுச்சேரி

பயனாளிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நாதஸ்வரம், தவில் வழங்கினார்.
பயனாளிகளுக்கு நாதஸ்வரம், தவில்
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
- தவளக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மணவெளி தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச முடி திருத்தும் உபகரணங்கள் நாதஸ்வரம் தவில் மற்றும் அயன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் தவளக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முடி திருத்தும் உபகரணங்கள் 6 பேருக்கும் சலவை பெட்டிகள் 9 ேபருக்கும் தவில் ஒருவருக்கும் நாதஸ்வரம் 2 பேருக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் குமரன், துணை இயக்குனர் சுகந்தி பன்னீர்செல்வம் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் பா.ஜனதா விவசாய அணி சக்திபாலன், ஞானசேகர், கிருஷ்ண மூர்த்தி, தவளக்குப்பம் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், சுகுமார், ராஜா, ஜெயக்குமார், நாகமுத்து, செல்வி, வீரபாலன், அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






