search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின விழா கொண்டாட்டம்
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின விழா கொண்டாட்டம்

    • புதியதாக கட்டப்பட்டிருக்கும் உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
    • விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா பள்ளியில் புதியதாக கட்டப்பட்டிருக்கும் உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படை தலைவர் சுப்பிரமணி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். மேலும் டாக்டர் ரங்கநாயகி வளவன் கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா , துணை முதல்வர் மங்கையர்க்கரசி பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா அருண் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுந்தர நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×