என் மலர்
புதுச்சேரி

முத்து ரத்தினம் அரங்கம் பள்ளி மாணவர்கள் குளம் தூய்மை பணியில் ஈடுபட்ட காட்சி.
முத்து ரத்தினம் அரங்கம் பள்ளி மாணவர்கள் குளம் தூய்மை பணி
- பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
- மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பா ளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 16-வது வாரமான இன்று புதுவை அபிஷேகப்பாக்கம் அயிற்றூர் மகாதேவர் கோவிலில் உள்ள குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
பூரணாங்குப்பத்தை சேர்ந்த பச்சையப்பன், தவளக்குப்பம் ரமேஷ், மற்றும் கோஜூரியோ கராத்தே சங்கத் துணைத் தலைவர் மதிஒளி புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி செய்திருந்தார்.






