என் மலர்
புதுச்சேரி

கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.
வெள்ளாழங்குப்பத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேகம்
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்
புதுச்சேரி:
திருபுவனைஅருகே உள்ள வெள்ளாழங்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட வள்ளி தெய்வானை முருகப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
கணபதி ஹோமம் நடத்தப்பட்டு முதல் காலையாக சாலை பூஜையும் மற்றும் 2-ம் காலயாக பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் அப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தான சரவண சிவாச்சாரியார் மற்றும் வெள்ளாழங்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து இக்கோவிலில் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.






