search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிகழ்ச்சியில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், சென்னை சைபர் ஹீல்ஸ். நிறுவனர் முகமத் இப்ராஹிம், எம்.ஐ.டி. கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளனர்.

    தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • திறன் மேம்பாடு மற்றும் தரவு ஆன்லைன் குறித்த செர்டிபைட் பயிற்சி அளிப்பதின் நோக்கம் ஆகும்.
    • துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லூரி), சென்னை சைபர் ஹீல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்து கொண்டது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் தரவு ஆன்லைன் குறித்த செர்டிபைட் பயிற்சி அளிப்பதின் நோக்கம் ஆகும்.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி முனைவர்.எம்.ஜெயக்குமார் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் சைபர் ஹீல்ஸ் நிறுவனர் முகமத் இப்ராஹிம், துறை தலைவர் பூங்குழலி மற்ற துறை தலைவர்கள் மேலும் துறை பேராசிரியர்கள் கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×