search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரெயில்வே கேட்டை கடக்க நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள்
    X

    புதுவை-கடலூர் ரெயில்வே கேட்டில் இன்று காலை காத்திருந்த வாகன ஓட்டிகள் முண்டியடித்து சென்ற காட்சி.

    ரெயில்வே கேட்டை கடக்க நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள்

    • மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
    • பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கேட் கீப்பரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் புதுச்சேரி-விழுப்புரம் மார்க்கத்தில் செல்கின்றன.

    இதில் புதன்கிழமை மட்டும் விழுப்புரத்தில் இருந்து 7 ரெயில்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 ரயில்கள் என 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இன்று காலை 9.55 மணிக்கு நியூ டெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டது.

    இதனிடையே இந்த ரெயில் சில வினாடிகளிலேயே சிக்னல் கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. புதுவை-கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பொதுவாக ெரயில்கள் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கேட் அடைக்கப்படுகிறது.

    இன்று காலை இந்த ரெயில் நீண்ட நேரம் ஆகியும் கேட்டை கடக்கவில்லை. இதனால் இந்த ெரயில்வே கேட் பகுதியில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ெரயில்வே கேட் எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் எதிர்பார்ப்புடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கேட் கீப்பரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் மாற்று பாதையில் செல்ல முடிவு செய்து புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் சுமார் அரை மணி நேரம் கழித்து சிக்னல் கிடைத்தது. அதன் பின் நியூ டெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இதயைடுத்து ெரயில்வே கேட்டுகள் அடுத்தடுத்து திறக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறமும் ஸ்தம்பித்த நிலையில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர்.இதனால் அந்த இடத்தில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சிக்கலான போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அந்த இடத்தில் மேம்பாலம் அமைத்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×