search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோடியும், ரங்கசாமியும் மக்களை ஏமாற்றுகின்றனர்
    X

    கோப்பு படம்.

    மோடியும், ரங்கசாமியும் மக்களை ஏமாற்றுகின்றனர்

    • வைத்திலிங்கம் எம்.பி.குற்றச்சாட்டு
    • நாராய ணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரிசி வழங்கப்பட்டது. கவர்னர் அரிசி வழங்குவதை தடுத்ததால் பணமாக வழங்கினோம்.

    புதுச்சேரி:

    பாகூர் வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் பேசியதாவது:-

    பாகூர் தொகுதி காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதி. கடந்த எம்.பி. தேர்தலில் மிகப்பெரும் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்தீர்கள். நீங்கள் ராகுல்காந்திக்காக ஓட்டு போட்டீர்கள். மோடி வேண்டாம் என நினைத்து ராகுல் காந்திக்கு ஓட்டு போட்டீர்கள். அதேபோல வரும் தேர்தலிலும் மோடியை ஒழித்துக்கட்ட வேண்டும். காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

    அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரிசி வழங்கப்பட்டது. கவர்னர் அரிசி வழங்குவதை தடுத்ததால் பணமாக வழங்கினோம்.

    தற்போது இத்திட்டத்தை யேநிறுத்திவிட்டனர். அதற்கான பணத்தையும் வழங்கவில்லை. இதனால் முதியோர் அவதிப்பட்டு வருகின்றனர். கியாஸ் வாங்கினால் ரூ.300 வழங்குவோம் என்றனர்.

    ஆனால் அதையும் தரவில்லை. பெண்களுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றனர். அதையும் வழங்கவில்லை. பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் ரங்கசாமியும் புதுவை மக்களை ஏமாற்றுகின்றனர்.

    ரங்கசாமி ஆட்சியில் தெருவுக்கு தெரு சாராயம், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும். இந்த ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ், ரூ.2 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்ப டுகிறது. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்க ப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மோடி யிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். ராகுல்காந்தி வெற்றி பெற கை சின்னத்து க்கு வாக்க ளிக்க வேண்டு ம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×