என் மலர்
புதுச்சேரி

புஸ்சி வீதி மீன் மார்க்கெட் அருகே நவீன தானியங்கி மின்மாற்றி கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
நவீன தானியங்கி மின்மாற்றி
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரிய பள்ளி மற்றும் வீரவள்ளி பகுதிகளில் மின் வெட்டு மற்றும் மின் நிறுத்தம் போன்ற பிரச்சினை இருந்து வந்தது.
- இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரிய பள்ளி மற்றும் வீரவள்ளி பகுதிகளில் மின் வெட்டு மற்றும் மின் நிறுத்தம் போன்ற பிரச்சினை இருந்து வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரி விடுத்தனர்.
இதை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி மூலம் 35 லட்சம் மதிப்பீட்டில் சின்ன மணிகூண்டு மார்க்கெட் அருகில் நவீன தானியங்கி மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர்கள் சுரேஷ், துரை சண்முகம், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, துணை செயலாளர் நாசர், மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, ஆட்டோ சங்க தலைவர் மிஷெல், கிளை செயலாளர் செல்வம், காலப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






