search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கீழூரில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தேசிய கொடியேற்றினார்
    X

    புதுவை சட்டப்பூர்வ பரிமாற்ற நாளை முன்னிட்டு கீழுரில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தேசியக் கொடியேற்றினார். அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஜான்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பலர் பங்கேற்றனர்.

    புதுவை கீழூரில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தேசிய கொடியேற்றினார்

    • பிறகு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • புதுவை இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    இந்தியா சுதந்திர மடைந்தாலும், பிரெஞ்சு ஆட்சியின் கீழ் புதுவை இருந்து வந்தது.

    இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் வில்லியனூர் அருகே உள்ள கீழூர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

    அதைத் தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட்டு 16-ந் தேதி புதுவை இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, புதுவை இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றது.

    இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற கீழூரில் புதுவை சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக, தியாகிகள் நினைவுத் தூண், நினைவு மண்டபம் உள்ளது. புதுவை இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் நடைபெற்றது.

    சபாநாயகர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் போலீஸ் மரியாதையை ஏற்றனர். இதன்பின் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தலைமை செயலர் ராஜீவ்வர்மா, அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தியாகிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற தியாகி ராமேலிங்கம் கூறியதாவது, ஆண்டுதோறும் இந்த நாளில் கவர்னர் கொடியேற்றுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கவர்னர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 3 ஆண்டாக இந்த சட்டபூர்வ பரிமாற்ற நாள் விழாவை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். புதுவை சுதந்திரத்துக்கு போராடிய தியாகிகளை அரசு மதிப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.

    Next Story
    ×