search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இடுகாட்டு பணியாளர்களுக்கு அடையாள அட்டை-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
    X

    இடுகாட்டு பணியாளர்களுக்கு அடையாள அட்டையை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கிய காட்சி.

    இடுகாட்டு பணியாளர்களுக்கு அடையாள அட்டை-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்

    • புதுவை மனிதநேய இடுகாட்டு புனித பணியா ளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
    • தேனீ.ஜெயக்குமார் புனித பணியாளர்க ளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உருவாக்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மனிதநேய இடுகாட்டு புனித பணியா ளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் புனித பணியாளர்களுக்கு அடை யாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க தலைமை ஆலோசகர் மேகராஜ், கௌரவத் தலைவர் ஆனந்தராஜ், மாநில தலைவர் ராமு, பொதுச் செயலாளர் காளிதாஸ், பொறுப்பாளர்கள் உலக நாதன், ஜெகதீசன், கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் புனித பணியாளர்க ளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உருவாக்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பணியாளர்களுக்கு இலவச வீடு, மனைப்பட்டா, நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

    Next Story
    ×