என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு பொறுபேற்று அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
- மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- பிளஸ்-2 தேர்விலும் அதிக மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை, காரைக்கால் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்தவில் ஆயிரத்து 677 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிக தோல்வி சதவீதமாகம். புதிய கல்விக் கொள்கை திணிப்பு, சி.பி.எஸ்.இ பாடத்திட்டம், முற்பட்ட சாதி இட ஒதுக்கீடு திணிப்பில் அக்கறை காட்டிய அரசு மாணவர்களுக்கு உரிய நேரத்தில் புத்தகம் வழங்கவில்லை, ஆசிரியர்களை நியமிக்கவில்லை. ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
காரைக்காலில் அதிகளவு மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். ஒரு மாணவன் தற்கொலை செய்துள்ளான். பிளஸ்-2 தேர்விலும் அதிக மானவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இவை அனைத்துக்கும் மக்கள் விரோத திட்டங்களுக்கு காட்டிய முனைப்பை கல்வி போதிப்பதில் காட்டவில்லை என்பதே ஆகும்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.






