search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வ.சுப்பையா சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை
    X

    வ.சுப்பையா சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    வ.சுப்பையா சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை

    • புதுவை அரசு சார்பில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • வ.சுப்பையா- சரஸ்வதி சுப்பையா நினைவு சமூக விஞ்ஞான ஆய்வு மைய நூலகத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, நெல்லித்தோப்பு சந்திப்பில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன், சுப்பையா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரதேச செயலாளர் ராஜாங்கம், பெருமாள், சி.ஐ.டி.யூ. சேதுசெல்வம், கலைஇலக்கிய பெருமன்றம் துரைசெல்வம் எல்லை சிவக்குமார், உள்பட பலர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல், புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெள்ளாழ வீதியில் உள்ள வ.சுப்பையா- சரஸ்வதி சுப்பையா நினைவு சமூக விஞ்ஞான ஆய்வு மைய நூலகத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் கந்தன் என்ற சிவராசன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    Next Story
    ×