search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மினி மராத்தான் போட்டி
    X

    மினி மராத்தான் போட்டியை வெற்றிச்செல்வம் தொடங்கி வைத்தார்.அருகில் ஜோதி சிலம்பம் குருகுல நிறுவனர் டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன் உள்ளார்.

    மினி மராத்தான் போட்டி

    • சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் புதுவையில் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டும் புதுவை சுவாமி விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை அர்ஜுனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் உழந்தைக் கீரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
    • மினி மராத்தான் கடலூர் ரோடு, ஏ.எப்.டிரோடு, புவன்கரே வீதி கடலூர் ரோடு வழியாக பள்ளியில் முடிந்தது.

    புதுச்சேரி:

    சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் புதுவையில் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டும் புதுவை சுவாமி விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை அர்ஜுனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் உழந்தைக் கீரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

    போட்டியை முதலியார்பேட்டை- கடலூர் சாலையில் அமைந்துள்ள அர்ஜுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலை பள்ளியில் சுவாமி விவேகானந்தர் சேவை மையத்தின் தலைவர் டாக்டர் க.வெற்றிச்செல்வம் தொடங்கி வைத்தார்.

    பள்ளி தலைமையாசிரியர் பாரி கந்தசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் சத்திரிய சேனா சேவக நிறுவனர் டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன், வல்லுநர் டாக்டர் கருணாகரன், விவேகானந்தர் சேவை மைய செயலாளர் செல்வம், பொருளாளர் கார்த்திகேயன், பயிற்சியாளர் ஆனந்தராஜ், டாக்டர் புகழேந்தி, முனியப்பன், கவுதம், கலந்து கொண்டனர். மினி மராத்தான் கடலூர் ரோடு, ஏ.எப்.டிரோடு, புவன்கரே வீதி கடலூர் ரோடு வழியாக பள்ளியில் முடிந்தது.

    மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்ககும் ரொக்கப் பரிசுகள், கேடயம் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியை சுவாமி விவேகானந்தர் சேவை மையத்தில் நிர்வாகிகளும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அரவிந்தன் , ஆசிரியர் பாலா உள்ளிட்ட ஊழியர்கள் ஒருங்கிணைத்தனர்.

    Next Story
    ×