search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர் சேர்க்கை
    X

    புதுவையில் விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர் சேர்க்கையை மேலிட பொறுப்பாளர் வேல்முருகன் தொடங்கி வைத்த காட்சி. 

    விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர் சேர்க்கை

    • விஸ்வ இந்து பரிஷத்தில் இணைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • நிகழ்ச்சிக்கு நகர மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    விஸ்வ இந்து பரிஷத்தில் இணைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதன்படி நாடு முழுவதும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஆதரவாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் 8 ஆயிரம் பேர் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா புதுவை ஈஸ்வன் கோவில் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். புதுவை மாநில தலைவர் ரவிக்குமார் மற்றும் மாநில செயலாளர் ரவிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலிட பொறுப்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணைத்தலைவர் இளங்கோ, இணை செயலாளர் தினகரன், பொருளாளர் கோவிந்தன், பஜ்ரங்தள் பொறுப்பாளர் சதீஷ், சம்பர்க் பிரமுகர் கார்த்திக்ராஜா, துர்கா வாகினி பொறுப்பாளர் சரஸ்வதி, இணை பொறுப்பா ளர் கோமலவள்ளி, மத மாற்ற தடுப்பு பிரிவு பொறுப்பாளர் சக்தி, கோரக்‌ஷா பொறுப்பாளர் சரவணக்குமார், புனித யாத்திரைகள் பொறுப்பாளர் ஜவகர் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×