search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருக்கனூரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    • விவசாயிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது.
    • கிருஷ்ணமூர்த்தி, ரகுநாத், கோதண்டபாணி, ராஜா, உமா விநாயகம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி சார்பில் திருக்கனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். விநாயகம், தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில நிர்வாகிகள் சீனுவாசன், சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.

    புதுவை மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. விவசாயிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது. மின்சார திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

    புதுவை அரசு மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கந்தநாதன், முத்து, நாகராஜ், அமிர்தவள்ளி, தமிழ்குமரன், பாரதி, சிவசங்கரி, மாரியப்பன், கல்வராயன், அருள், தீனதயாளன், பாலச்சந்திரன், பெரியசாமி, ராமச்ச்சந்திரன், முருகன், பிரபாகர், சந்திரன், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, ரகுநாத், கோதண்டபாணி, ராஜா, உமா விநாயகம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×