என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்
- சமாதியில் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி
- பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. யானையின் உடலை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
புதுவைக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களும் சுற்றுலா பயணிகளும் மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து லட்சுமி யானையிடம் ஆசி வாங்குவதை வழக்கமாக கொண்டிரு ந்தனர்.
அதோடு லட்சுமி யானைக்கு வாழைப்பழம், அருக்கம்புல், போன்றவற்றை வழங்கி மகிழ்வார்கள், குழந்தைகளும் ஆவலோடு யானை மீது அமர்ந்து மகிழ்வார்கள்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் யானையின் வசிப்பிடமான ஈஸ்வரன் கோவில் வீதியிலிருந்து அதிகாலை நடை பயிற்சி சென்றபோது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மயங்கி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. யானையின் உடலை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். யானையின் உடலுக்கு மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது இந்தியா முழுவதுமே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யானை உடல் அடக்கம் செய்யும் வரை பொதுமக்கள் சோகமாகவே இருந்தனர். தொடர்ந்து யானை நினைவு இடத்தில் தினமும் பக்தர்கள் பால் ஊற்றி வணங்கி வந்தனர்.
இந்த நிலையில் யானை லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று நடைபெற்றது. வனத்துறை அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானை லட்சுமி நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்து புனித நீரை யானையின் நினைவிடத்தின் மீது ஊற்றி சிவ வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமானோர் யானை லட்சுமிக்கு பிடித்தமான ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, கொய்யா , வாழை போன்ற பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய் ஆகியவற்றை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்