என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மல்லர்கம்ப போட்டி பரிசளிப்பு விழா
    X
    கோப்பு படம்.

    மல்லர்கம்ப போட்டி பரிசளிப்பு விழா

    • தேசிய அளவிலான விளையாட்டு திருவிழாவை நடத்தியது
    • கயிறு ஏறுதல், மல்லர்கம்பம் போட்டிகள் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நேரு யுவகேந்திரா சங்கேதன் மற்றும் சத்திரிய அகாடமி இணைந்து தேசிய அளவிலான விளையாட்டு திருவிழாவை நடத்தியது. முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த விழாவில் கயிறு ஏறுதல், மல்லர்கம்பம் போட்டிகள் நடந்தது.

    புதுவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பள்ளிகள், 3 கல்லூரிகளை சேர்ந்த மல்லர் கம்ப வீரர், வீராங்கணைகள் 90-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    3 சுற்றாக போட்டி நடந்தது. 17 வயதுக்கு உட்பட்டோர் ஒரு பிரிவாகவும், 17 வயதுக்கு மேற்பட்டோர் ஒரு பிரிவாகவும் பங்கேற்றனர். இதில் பிரமீடு சுற்று போட்டியில் பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் முதலிடத்தையும், சாய்ராம் பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும் பெற்றனர். எஸ்.பி.வீரவல்லவன், சத்ரிய அகாடமி நிறுவனர் கணேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    Next Story
    ×