search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் குறைந்த மின் அழுத்தம் அதிகரிப்பு
    X

    கோப்பு படம்.

    புதுவையில் குறைந்த மின் அழுத்தம் அதிகரிப்பு

    • மத்திய தொகுப்பில் மின்சாரம் குறைந்துள்ளதால் மின் அழுத்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.
    • நகர் பகுதிகளிலும் திடீரென மின் அழுத்தம் கூடுவதும், பின்னர் குறைவதுமாக உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

    பிற மாநிலங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. புதுவை மாநிலத்தின் மின்தேவை சுமார் 600 மெகாவாட். சராசரியாக தினமும் 520 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து புதுவைக்கு வருகிறது.

    சில நாட்களாக மத்திய தொகுப்பிலிருந்து 400 மெகாவாட் மட்டுமே மின்சாரம் வருகிறது. 120 மெகா வாட் குறைந்துள்ளதால் புதுவையில் பல பகுதிகளில் மின் அழுத்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.

    கிராமப்புறங்கள் மட்டு மின்றி, நகர் பகுதிகளிலும் திடீரென மின் அழுத்தம் கூடுவதும், பின்னர் குறைவதுமாக உள்ளன.

    இதனால் மின்சாதன பொருட்கள் அதிகமாக சேதமடைகின்றன. வழக்கமாக கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும். மத்திய தொகுப்பில் மின்சாரம் குறைந்துள்ளதால் மின் அழுத்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.

    இதை சமாளிக்க மின் மாற்றியின் திறனை அதிகரிக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×