search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுபான கடைகளை மூட வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மதுபான கடைகளை மூட வேண்டும்

    • கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி மனு
    • புதுவை மண்ணின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சீர் குலைக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் கவுரி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கட்டுங்கடங்காது இயங்கி வரும் மதுக் கடைகளால் தமிழ் குடும்பங்கள் மிக வேகமாக சீரழிந்து வருகிறது. கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும் அரசு, உயிருக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடான மதுவினை விற்க அனுமதிப்பது எவ்வகையில் நியாயமாகும்?

    பெரும்பாலான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சாலை விபத்து உள்ளிட்ட அனைத்து சமூக குற்றங்களுக்கும் அடிப்படை யாக இருப்பது மது பானங்கள்தான். புதுவை மாநிலத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் விதவைகள் வாழ மதுவே காரணம். பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கும் மது காரணமாகிறது.

    எனவே புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். சுற்றுலாதலம் என்ற பெயரில் புதுவை மண்ணின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சீர் குலைக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த சந்திப்பின்போது மகளிர் பாசறை பொருளாளர் தேவிகா, சசிகலா, பிரியாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இளங்கோவன், இரமேசு, திருமுருகன், காமராஜ், திவாகர், ஜெகதீஷ், வினோத், சுந்தர், சந்துரு, தனசேகரன், பிரியா, நிர்மல்சிங், யுவன்செந்தில், மதியழகன், வீராசாமி, பெரியான், செந்தில்முருகன், ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×