என் மலர்
புதுச்சேரி

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் ஜே.ஆர் நகர் முழுவதும் மின்விளக்குகளை உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வின் சீரிய முயற்சியால் உடனடியாக பொருத்தப்பட்டது.
மின்விளக்குகள் பொருத்தும் பணி
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
- சங்கர நாராயணன், மற்றும் ராகேஷ்கவுதம், கட்சியினர் ரகுராமன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஜே.ஆர். நகர் உள்ளது. அங்கு சுமார் 15 வருட காலமாக மின்விளக்குகள் இல்லாமல் இருந்தது.
அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மின் விளக்கு அமைத்து தரும்படி கேட்டுக்கொண்டனர். மின்துறை உதவி செயற்பொ றியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சுரேஷ் ஆகியோரையும் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று தற்போது ஜே.ஆர். நகர் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. அதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளைச் செயலாளர்கள் காந்தி, செல்வம், சங்கர நாராயணன், மற்றும் ராகேஷ்கவுதம், கட்சியினர் ரகுராமன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.






